Tuesday 29 July 2014

இறைவா! நீ உறங்கியே கிட!

இறைவன் ஏகனாய்
இருக்கிறான்!
குண்டுமழை பொழியும்
காசாவினை காப்பாற்ற
தனியாளாய் என்ன பண்ணுவான்?
பாவம்!.


மேற்கு கரைவாசிகள்
தீவிர நம்பிக்கையாளர்கள் போலும்?
இறைவனின் கருணையால்
இன்னும் பிழைத்திருக்க.

பெத்லகேம் குகையினுள்
இரத்த வெறியூட்டி
இரண்டு கடவுள்களால்
போடப்பட்ட
இறுதி திட்டமிது.


ரமலான் களிப்பில்
களைத்திருக்கிற
நம் கடவுள்,
நன்றாக தூங்கட்டும்.
அவர்தம் பிள்ளைகள்
ஆயிரம் ஆண்டுகளாய்
மாண்டு மடியட்டும்.

இப்ரகீமின் கையாளாகாத
செயலால்
இருண்டுகிடக்கிற கூட்டம்.
பிள்ளைப்பேறு அளித்து
ஈகை தொடங்கிய கூட்டம்.
இதோ!
ஈகைத்திருநாளில்
இருண்டுகிடக்கிறது.

அடே! இறைவா!
நீ உறங்கியே கிட!
யாசர் அராபத்தை மட்டுமாவது,
மறுபடியும்
அனுப்பி வை.

No comments:

Post a Comment