Showing posts with label இளவரசன். Show all posts
Showing posts with label இளவரசன். Show all posts

Wednesday, 10 July 2013

பொய்ப் புளுகன்களும்,எக்ஸ்பிரஸ் மால்-களும்

தனியார் வசம், அதிலும் சிண்டு முடிந்துவிடும் ஆதிக்க சாதி வர்க்கத்தின்  பத்திரிக்கைகள் இருக்கிறவரை  ’நடுநிலை’-யும்,  ’உண்மையின் உரைகல்’- லும்  சாத்தியமில்லை. 

மல்டி மால் நடத்துகிற, பள்ளிக்கூடம் நடத்துகிற, கல்லூரிகள் நடத்துகிற அரசியல்வாதிகளை பற்றி உண்மை, அவதூறு, கிசுகிசு, பரபரப்புச் செய்திகளை போடுகிற தெருப்புழுதிகள் மல்டி மால் நடத்துகிற, பள்ளிக்கூடம் நடத்துகிற, கல்லூரிகள் நடத்துகிற பத்திரிக்கை வெண்ணைகளை பற்றி எழுத  முன்வருமா?.

தர்மபுரியில் ஆதிக்க சாதிகள் நடத்திய வன்முறை பற்றி தினமலரோ, தினமணியோ, ஆவி, ஜூவி, குமுதம் ரிபோர்ட்டர் போன்ற பத்திரிக்கை சிகாமணிகள் ”இரு சாதிகள் செய்துகொண்ட கலவரம்’ என ஒற்றை வரியில் எழுதி மூடிக்கொண்டதும்,  இன்று இளவரசன் மரணத்திற்கு அப்பால் அவன் படத்தை தாங்கி அட்டைப்படம் போட்டு சாவுப்பிச்சை கேட்பதும்,  இவைகளெல்லாம் நாட்டைக் காக்கும் நாலாவது தூணா, இல்லை.. இழவு வீட்டில் ஆதாயம் பிடுங்கும் பிணந்திண்ணிகளா எனக் கேட்கத் தோன்றுகிறது.

இந்த பத்திரிக்கைக்கார யோக்கிய மயிராண்டிகள் ’ஆக்கிரமிப்பு’, ’அதர்மம்’, ’அட்டகாசம்’ , என தலைப்பு போட்டு அடுத்தவனை ஆயிரம் நொல்லை பேசிவிட்டு ”எக்ஸ்பிரஸ் மால் கொலை, தினமலர் நெல்லைக்கோயில் இட ஆக்கிரமிப்பு” போன்ற செய்திகளை தம் பொச்சுக்குள் அமுக்கிகொண்டு இருப்பது என்ன பத்திரிக்கை தர்மமெனத் தெரியவில்லை.


அடுத்தவன் படுக்கையறையில் நடப்பதை விளக்கு வைத்து பார்த்ததுபோல் எழுதுகிற, புறணி பேசுகிற மயிராண்டிகள் ஏன் EXPRESS AVENUE - வில் நடந்த கொலையை, கொலை செய்தவனை, அதை எதிர்த்து குரல் கொடுத்தவர்களை, அதை தடுக்க ஆயத்தமாகி தோற்றுப்போனவர்களை, காவல்துறையினரிடம் சண்டைபோட்டவர்களை ஒரு பேட்டி எடுத்து எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் போடக்கூடாது.

பத்திரிக்கைகாரன் தருகிற எலும்பை எல்லா பத்திரிக்கை நாய்களும் கவ்விக் கொண்டதால் இருட்டடிப்பு செய்யப்பட்ட கொலை நிகழ்வு காணொளி.....

Thursday, 4 July 2013

மரணத்திற்கு உன் சாதி பதில் சொல்லுமா? த்தூ.... தமிழ்நாடே!


இது நம் சமூகத்தின் சாபக்கேடு. சாதியின் கொடுந்தீ! த்தூவென.. தூற்றுவோம் இச்சமூகத்தை.
 
கடந்த 6 மாத காலமாக ”எது உயர்ந்த சாதி?” என்ற மனித குலத்தின் மிக உன்னதமான 
கேள்விக்கு வடிகாலாய் தம்பி இளவரசனின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.
தான் உயிராய் நேசித்த பெண்ணை திருமணம் செய்வதென்பது பெருங்குற்றமென இச்சமூகம் அங்கீகரிக்கையில், ”நீ இந்த சாதி. நீ காதலித்தால் அது வெறும் நாடகக் காதல்தான்” என பெருங்கூட்டமாய் நின்று ஆதிக்க கூட்டம் எள்ளி சிரிக்கையில், பாவம் அவன் அவனை நிரூபிக்கிற கட்டாயத்தில் இன்று தற்கொலை செய்துவிட்டான்.

நேற்றுக்கூட நம்பிக்கை வெள்ளத்தின் கடைசித் துளியாய்  ’திவ்யா நமக்காக திரும்ப கிடைப்பாள்’ என்றும், ’என்றாவது ஒருநாள் சேர்ந்து வாழலாம்’ என்றும் இருந்த இளவரசன் காதுகளில் திவ்யா கோர்ட்டில் சொன்னது இன்னும் துக்கத்தை உண்டு பண்ணியிருக்கும். இப்பாழும் சமூகத்தின் மத்தியில் தன் காதலை புரிய வைப்பது கடினம் என முடிவெடுத்து தன் உயிரை மாய்த்து கொண்டான் இறுதியாக.

இதை சாதாரணமாய் நோக்கும் நம் சாமான்யர்கள்  “இந்த பொம்பளை பிள்ளைங்களே இப்படித்தான், காதலிச்சுட்டு ஏமாத்திரும்ங்க” என திவ்யா மேல் ஒட்டுமொத்த பழியை போடக் கூடும். இது திவ்யா சுயமாக எடுத்த முடிவல்ல என்பதும், இளவரசன் எதற்காக  உயிரை விட்டான் என்பதும் ஊரரிந்த உண்மை. தயவு செய்து திவ்யாவை யாரும் பழி சொல்லி இன்னும் காதலை கேவலப்படுத்த வேண்டாம். சாதிதான் இந்த காதலுக்கு பலத்த எதிரியே அன்றி வேறு யாரும் காரணமல்ல. வற்புறுத்தி ”காதல் இல்லை” என மறுக்க சொல்லலாம்; காதல் தன்னை நிரூபிக்கிற மொழியும் வழியும் மிகக் கொடுமையானது. அதைத்தான் இளவரசன் மூலம் காதல் தன்னை நிரூபித்து காட்டியிருக்கிறது.


சாதிதான் இந்த காதலுக்கு பலத்த எதிரியே அன்றி வேறு எதுவும்  காரணமல்ல. இளவரசன் அச்சாதியில் பிறந்தது குற்றம், வளர்ந்தது குற்றம், படித்தது குற்றம், மனித பிறப்பின் அடிப்படை உணர்வான காதலை வெளிப்படுத்துவதும், திருமணம் முடிப்பதும் குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது போலும். சாதி வெறியர்களை பெற்றோராய், சுற்றமாய் அமையப்பெற்ற பெற்றோர் பெரும் குழந்தைகள் சாபக்கேடு பெற்றவர்கள். அச்சாபக்கேட்டின் விளைவாக அரங்கேறிய காதல் நாடகம்தான் இந்த தற்கொலை.



இளவரசன் காதலர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நல்லதொரு பாடத்தை தந்துவிட்டு சென்றிருக்கிறான். படித்து திருந்துவது நம் கடமை. வெறிகொண்ட மட்டும் இன்னும் இன்னும் எதிர்ப்போம் சாதியையும் அது சார்ந்த ஒட்டுண்ணிகளையும்.




தம்பி இளவரசனுக்கு வீரவணக்கம்.