Showing posts with label சரஸ்வதி பூஜை. Show all posts
Showing posts with label சரஸ்வதி பூஜை. Show all posts

Sunday, 27 October 2013

ஈரோடு லாட்ஜும், சுஜாதா புத்தகமும்

ஒரு மாதம் முன்பு ஈரோடு சென்றிருந்தபோது கிளிஃப்டன் என்ற
லாட்ஜில் தங்க நேர்ந்தது. படித்து மறந்துபோய் குளியலறையில் ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு வந்துவிட்டேன்.சுஜாதா எழுதிய கட்டுரைகள்.

பின்பு தொலைபேசியில் லாட்ஜ் மேலாளரை அழைத்து எடுத்து வைத்திருக்குமாறும் பின்னர் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்றும் சொன்னேன்.

சரி! என்றார்.

நேற்று ஈரோடு சென்றதால் அங்கு போய் புத்தகத்தை தருமாறு கேட்டேன். அங்கிருந்தவர் தேடிப்பார்த்தார். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த மேலாளருக்கு தொலைபேசினார்.

பிறகு என்னிடம் வந்து “சார்! போன வாரம் இந்த சரஸ்வதி பூஜை சாமி கும்பிட்டப்போ! எல்லாத்தையும் சுத்தம் பண்ணினோம். அப்போ! அந்த புத்தகத்தை குப்பையோட குப்பையா போட்டுட்டாங்க சார். சாரி! சார்.”

காணவில்லை என்று பொய் சொல்லியிருக்கலாம் அவர். குப்பையில் என்றவுடன் மனம் வருத்தப்பட்டது.

”ஏன்? சார் குப்பையில போட்டாங்க? யாருக்காவது குடுத்திருக்காம்ல.”

”யாரு சார் படிக்கப் போறாங்க? நமக்கே அதெல்லாம் பிடிக்காது!”

”சரி! வர்றேன் சார்! ஆனா இனிமே புத்தகங்கள குப்பையில போட்டுடாதீங்க” – என விடைபெற்றேன்.

சரஸ்வதி பூஜை கொண்டாடினாய்ங்களாம்!
புத்தகத்தை குப்பையில போட்டாங்களாம்!

இவிய்ங்க கொண்டாடுறதுதான் சரஸ்வதி பூஜை.

அம்மா பஃப் வச்ச ஜாக்கெட்காரி! கல்விக்கடவுளே! பாத்துக்கம்மா..இவனுங்கள!