Showing posts with label பத்திரிக்கை. Show all posts
Showing posts with label பத்திரிக்கை. Show all posts

Wednesday, 10 July 2013

பொய்ப் புளுகன்களும்,எக்ஸ்பிரஸ் மால்-களும்

தனியார் வசம், அதிலும் சிண்டு முடிந்துவிடும் ஆதிக்க சாதி வர்க்கத்தின்  பத்திரிக்கைகள் இருக்கிறவரை  ’நடுநிலை’-யும்,  ’உண்மையின் உரைகல்’- லும்  சாத்தியமில்லை. 

மல்டி மால் நடத்துகிற, பள்ளிக்கூடம் நடத்துகிற, கல்லூரிகள் நடத்துகிற அரசியல்வாதிகளை பற்றி உண்மை, அவதூறு, கிசுகிசு, பரபரப்புச் செய்திகளை போடுகிற தெருப்புழுதிகள் மல்டி மால் நடத்துகிற, பள்ளிக்கூடம் நடத்துகிற, கல்லூரிகள் நடத்துகிற பத்திரிக்கை வெண்ணைகளை பற்றி எழுத  முன்வருமா?.

தர்மபுரியில் ஆதிக்க சாதிகள் நடத்திய வன்முறை பற்றி தினமலரோ, தினமணியோ, ஆவி, ஜூவி, குமுதம் ரிபோர்ட்டர் போன்ற பத்திரிக்கை சிகாமணிகள் ”இரு சாதிகள் செய்துகொண்ட கலவரம்’ என ஒற்றை வரியில் எழுதி மூடிக்கொண்டதும்,  இன்று இளவரசன் மரணத்திற்கு அப்பால் அவன் படத்தை தாங்கி அட்டைப்படம் போட்டு சாவுப்பிச்சை கேட்பதும்,  இவைகளெல்லாம் நாட்டைக் காக்கும் நாலாவது தூணா, இல்லை.. இழவு வீட்டில் ஆதாயம் பிடுங்கும் பிணந்திண்ணிகளா எனக் கேட்கத் தோன்றுகிறது.

இந்த பத்திரிக்கைக்கார யோக்கிய மயிராண்டிகள் ’ஆக்கிரமிப்பு’, ’அதர்மம்’, ’அட்டகாசம்’ , என தலைப்பு போட்டு அடுத்தவனை ஆயிரம் நொல்லை பேசிவிட்டு ”எக்ஸ்பிரஸ் மால் கொலை, தினமலர் நெல்லைக்கோயில் இட ஆக்கிரமிப்பு” போன்ற செய்திகளை தம் பொச்சுக்குள் அமுக்கிகொண்டு இருப்பது என்ன பத்திரிக்கை தர்மமெனத் தெரியவில்லை.


அடுத்தவன் படுக்கையறையில் நடப்பதை விளக்கு வைத்து பார்த்ததுபோல் எழுதுகிற, புறணி பேசுகிற மயிராண்டிகள் ஏன் EXPRESS AVENUE - வில் நடந்த கொலையை, கொலை செய்தவனை, அதை எதிர்த்து குரல் கொடுத்தவர்களை, அதை தடுக்க ஆயத்தமாகி தோற்றுப்போனவர்களை, காவல்துறையினரிடம் சண்டைபோட்டவர்களை ஒரு பேட்டி எடுத்து எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் போடக்கூடாது.

பத்திரிக்கைகாரன் தருகிற எலும்பை எல்லா பத்திரிக்கை நாய்களும் கவ்விக் கொண்டதால் இருட்டடிப்பு செய்யப்பட்ட கொலை நிகழ்வு காணொளி.....