Saturday 6 September 2014

புறவழிச்சாலை - 2

புறவழிச்சாலை
இலக்கணம் யாது?

மரணவேகம்.

பக்கவாட்டில்
வேடிக்கை கூடாது.
100 க்கு குறைவது
வாடிக்கை கிடையாது.

கார்மேகம் பொழிந்து
சாலை வழுக்கினாலும்
கார்களின் வேகம் 150.

ஆட்டிக்குட்டிகள்
சாலை கடக்கலாம்
ஆக்சிலேட்டர் ரிலீசாகாது.

நடந்து செல்வதற்கான
சாலை இதுவல்ல.
நடந்து போகிற யார்க்கு
உயிர் உத்திரவாதமுமல்ல.

மிகையல்ல தோழர்!
மிதிவண்டி நகைப்புக்குறியது.

தனியார் பேருந்து
அரசுப் பேருந்தை
உரசிக்கொண்டு முந்த..
அரசு, பதிலுக்கு
நெருங்கி முறைக்கும்,
பயணி நெஞ்சு பதைக்கும்.

வேகமாய் செல்லும்
வாகனங்கள் மட்டும்
அச்சாலையில் செல்லும்.
’மித வேகம் மிகநன்று’-செல்லாது.

மரணவேகம்
மட்டுமே செல்லும்.
சிலநேரம்
மரணமும்தான்.

No comments:

Post a Comment