TITANIC படத்தை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் நானும் நன்பர்களும் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சி பார்த்தோம்.
ஒரு வாரம் கழித்து அந்நண்பர்களில் ஒருவனான முத்துவிடம் நான் பேசிகொண்டிருந்தபொழுது...அவன் கீழ்கண்டவாறு சொன்னான்......
“ டே,மாப்ள! அவள அன்னைக்கு 14B-ல பாத்தேனா... TITANIC-க்கா இருந்தாடா!..பாத்துட்டேருக்கேன்
.... பஸ் எடுத்துட்டான்.... நான் விரட்டிகிட்டு போய் சும்மா TITANIC-க்கா பஸ்ல தொத்திகிட்டே போறேன்..அவ என்ன பாக்கவே இல்லை..
சரி இறங்கி பேசுவோம்னு பாத்தா தக்காளி அவங்கப்பன் ஸ்டாப்ல TITANIC-க்கா நிக்கிறான்..? நான் கடுப்பாயிட்டேன்"
இதேபோல் அவன் JUMANJI பார்த்தபோதும் பேசியுள்ளான்.
ஒரு வாரம் கழித்து அந்நண்பர்களில் ஒருவனான முத்துவிடம் நான் பேசிகொண்டிருந்தபொழுது...அவன் கீழ்கண்டவாறு சொன்னான்......
“ டே,மாப்ள! அவள அன்னைக்கு 14B-ல பாத்தேனா... TITANIC-க்கா இருந்தாடா!..பாத்துட்டேருக்கேன்
சரி இறங்கி பேசுவோம்னு பாத்தா தக்காளி அவங்கப்பன் ஸ்டாப்ல TITANIC-க்கா நிக்கிறான்..? நான் கடுப்பாயிட்டேன்"
இதேபோல் அவன் JUMANJI பார்த்தபோதும் பேசியுள்ளான்.
சென்னையில் என் பாட்டி 1 மணி நேரம் என்பதை ”ஒரு ஹவர்” என்றுதான் சொல்லும்.
என் கடை எதிரே உள்ள ஆட்டோ ஓட்டுகிற பெருமாள் அண்ணன் ஒரு நாள் “அந்த சவாரி "TERMINATE" பண்ணிச்சுருண்ணே நம்மள. இங்கனயிருந்து மாட்டுத்தாவணிக்கு 60 ரூவா கொடுத்து, போய் இறக்கிவுட்டா நம்ம்ள வெயிட்டிங் போட்டுட்டு பஸ்ஸ்டாண்ட் உள்ள போயிடுச்சு. அரை மணி நேரமா காணாம். சரி கிளம்பள்லாம்னு பாத்தா வேற சவாரி காணோம். சவாரி,கிவாரி கிடச்சாலாவது அதுக்கு இது ”ஈக்கோல்” ஆகும்” என்றார் .
என் பையன் நான் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை பார்த்து “ அப்பா செயின் மங்காத்தாவா இருக்குப்பா.சூப்பர்.” என்கிறான் நேற்று.
தமிழில் நிறைய புது IDIOMS & PHRASES உருவாகி வருகிறது.
ஒரே ஜுமாஞ்சியா இருக்கில்ல?
No comments:
Post a Comment