இன்று பாண்டிச்சேரியில் பேருந்தில் அமர்ந்திருந்தபொழுது ஒரு பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை அவள் கணவன் பேருந்தில் ஏற்றிவிட வந்திருந்தான். வண்டி கிளம்புகிற வரை வெளியில் நின்று கொண்டிருந்த அப்பெண் தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை பற்ற வைத்தாள். பற்ற வைத்த தீக்குச்சியை தன் கையை உதறி அணைத்தாள்.
அடுத்து அவள் செய்ததுதான் இந்த திருநாட்டில் யாருமே செய்யாதது அல்லது செய்து நான் பார்க்காதது.
அணைத்த தீக்குச்சியை கீழே எறியாது அதே தீப்பெட்டிக்குள் உள்ளே வைத்துகொண்டாள் அப்பெண். சரி! அணைக்கப்போகும் சிகரெட்டை என்ன செய்வாள்? பார்ப்போம்.. என நான் கண்காணித்தேன். சிகரெட்டை போட தனியாக ஒரு தகர டப்பாவை எடுத்தாள். நம் முன்னோர்கள் பயன்படுத்திய வெத்தலைப் பெட்டியை எனக்கு ஞாபகபடுத்தியது அப்பெட்டி.
தீப்பெட்டியிலும் வெத்தலைபெட்டியிலும் தெரிந்தது – அப்பெண்ணின் சுய ஒழுக்கமும், அவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தில் குப்பைத்தொட்டியே இல்லாததும்.
அடுத்து அவள் செய்ததுதான் இந்த திருநாட்டில் யாருமே செய்யாதது அல்லது செய்து நான் பார்க்காதது.
அணைத்த தீக்குச்சியை கீழே எறியாது அதே தீப்பெட்டிக்குள் உள்ளே வைத்துகொண்டாள் அப்பெண். சரி! அணைக்கப்போகும் சிகரெட்டை என்ன செய்வாள்? பார்ப்போம்.. என நான் கண்காணித்தேன். சிகரெட்டை போட தனியாக ஒரு தகர டப்பாவை எடுத்தாள். நம் முன்னோர்கள் பயன்படுத்திய வெத்தலைப் பெட்டியை எனக்கு ஞாபகபடுத்தியது அப்பெட்டி.
தீப்பெட்டியிலும் வெத்தலைபெட்டியிலும் தெரிந்தது – அப்பெண்ணின் சுய ஒழுக்கமும், அவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தில் குப்பைத்தொட்டியே இல்லாததும்.
No comments:
Post a Comment