சுடுதண்ணீர்
முகத்தினிலே
சுட்டதுபோல்
உறுமுகிறார்
எங்கள் அண்ணன்.
மஞ்சள் நோட்டீஸ்
கண்ணில் படவேயில்லை..
ஆறாத வடு
தீறாத கொடுமை போலும்.
கொதிகலன்
நீரை போல
கொதிக்கின்றார்
நாள்தோறும்..
மஞ்சள் நோட்டீஸ்
கண்ணில் படவேயில்லை.
முக்குகிறார்
முணங்குகிறார்
முழங்குகிறார்
இன்னும்
முறுக்குகிறார்
கைகளையெல்லாம்..
மஞ்சல் நோட்டீஸ்
கண்ணில் படவேயில்லை.
ஒருதினம்
மேடையிலே
முக்கியபின்
தெருவோரம்
பார்க்கையிலே
சுவரொட்டிய
மஞ்சள் நோட்டீஸ்
இவர் கண்ணில்
பட்டதடா...
தம்பிகளே! குஞ்சுகளே!
அழைத்து செல்லுங்கள்
சீமானை
சீக்கிரமாய் அங்கே!!
எங்கே?????
மஞ்சள் நோட்டீஸை,
உற்று நோக்கினோம்.
“மூலம், பவுத்திரம்,
முடவாதம், அஜீரணம்,
நீங்காத வியாதிக்கு
உடனடியாய் தீர்வு பெற
வாருங்கள்! வாருங்கள்!”
No comments:
Post a Comment