Monday 4 November 2013

உங்க ஓட்டு

குமாரபளையம் செல்லும் பேருந்தில் ஒருத்தர்….

”ரிசர்வ் பேங்கும், கவர்மெண்ட்டும் சேர்ந்து நிறைய பணத்தை அச்சடிச்சுட்டான். அதான் பணப்புழக்கம் அதிகமா ஆயிடுச்சு. அப்போதான் நிலமெல்லாம் வாங்கி போட்டாங்க நிறைய பேர். பெரிய பெரிய பில்டிங் கட்டுனான். அப்போதான் திமுக மந்திரி….அவரு பேரு என்னங்க? ஆங்...ராஜா-ன்னு ஒரு மந்திரி. அந்நாளு எல்லாப் பணத்தையும் முடக்கிட்டான். திமுக கணக்குக்கு அந்த பணத்தையெல்லாம் டெர்மினேட் பண்ணிட்டான். அதான் இப்போ எங்க வியாபாரம் டல்லாயிடுச்சு”.

”நீங்க என்ன வியாபாரம் பண்றீங்க?”

”நான் ரியல் எஸ்டேட் புரோக்கர் சார்!”

”ஓ! இங்க ஏர்போர்ட் வரப்போகுது, மெடிக்கல் காலேஜ் வரப்போகுது-ன்னு சொல்லியே திறமையா நிலத்தை வித்துடுவீங்க. கரக்டா?” என்று சிரித்தேன்.

”அப்படியெல்லாம் சொன்னாலும்..இப்பெல்லாம் மக்கள் விவரமா இருக்காங்க சார்”

”உங்க வீட்டுல எத்தனை ஓட்டு சார்!”

”பதினாறு சார்! பள்ளிப்பாளையுத்துல நம்ம ஃபேமிலிதான் பெருசு”

”உங்க விவரத்துக்கு நீங்க ஓட்டே போடக்கூடாது சார்”
”ஏன்? சார்!”

”அரசியல் சாக்கடை சார். நீங்கெல்லாம் ஒருத்தனுக்கும் ஓட்டுப் போடக்கூடாது சார்”

”ஆமாம் சார்” என அழகாக வெட்கப்பட்டார்.

இந்த மாதிரி புண்ணியவானுங்க என்ன மயித்துக்கு ஓட்டுப் போடனும் என்ற என் மைண்ட் வாய்ஸ் உடன் இறங்கி கொண்டேன் கு.பாளையத்தில்.

No comments:

Post a Comment