Monday, 4 November 2013

சலித்துபோன நாத்திகம்

நம் சமூகத்தின் பெரும் நோய் சலிப்படைதலும், மறத்தலும். ’பகுத்தறிவு’ , ’நாத்திகம்’ போன்றவையெல்லாம் பழைய சொல்லாடல்கள் ஆகிவிட்டன. ’நாத்திகம்’ என்ற சொல்லாடலை “நாஸ்தி” என்ற புரிதலோடுதான் அர்த்தப்படுத்தி கொள்கிறான் சாமான்யன். இச்சொல்லாடல்கள் ஆரம்பத்தில் அனைவருக்கும் பிடித்துபோனது. இப்போது அது பழகிப்போய் சலிப்பாகவும், எரிச்சலாகவும் ஆகியிருக்கிறது.

’ஆன்மீகம்’ அப்படியில்லை. மிகத்திறமையாக ஆன்மீகத்திற்கு புதுத்தலைப்பிட்டு மெய்ஞானம், மெய்யறிவு, வாழும் கலை, உயிர் தேடல், யோகம் என்றெல்லாம் மாற்றிப்போட்டு ஆன்மீகத்தை வளர்க்கின்றனர் சாமியார்கள். இச்சொல்லாடல்களை பிரபலப் படுத்த பிரச்சார கருவியாக அமிர்த யோகம், கிருஷ்ண விழிப்புணர்வு, நித்ய தர்மம், இயேசு நேசிக்கிறார்/ விடுவிக்கிறார் என்றெல்லாம் புரட்டிப்போட்டு விழாக்களும், பட்டறைகளும் வேறு.

உண்மையில் ’மெய்யறிவு’, ’மெய்ஞானம்’ எல்லாம் பகுத்தறிவாளர்கள் உபயோகப்படுத்தியிருக்க வேண்டிய வார்த்தைகள். மிகத் தெளிவாக ஆன்மீகச் சாமியார்கள் அதனை தமதாக்கி கொண்டனர்.

புதிய தலைப்புகளோடு, புதிய சொல்லாடல்கள் சலிப்படைதலை நோயென கொண்டுள்ள சமூகத்திற்கு மிகவும் அவசியம். நாத்திகத்திற்கு மாற்று வார்த்தையும் புதிய சொல்லாடல்களும் மிக மிக அவசியம்.

2 comments:

  1. சிந்திக்க வேண்டிய கருத்துகள்.

    ReplyDelete
  2. சிந்திக்க வேண்டிய கருத்துகள்.

    ReplyDelete