நிறைய வருடங்களுக்கு முன் மதுரை அமெரிக்கன் கல்லூரி எதிர் சந்தில் உள்ள சாந்தி பட்டன் எதிரில் இருக்கிற டீக்கடையில் டாப்”படிக்கையில்” அமெரிக்கன் கல்லூரி அண்ணன்கள் ஃபிரென்ச் பியர் சகிதம் முதுகில் கிட்டார் சுமந்துகொண்டு, அருகிலுள்ள புல்லட் ஒர்க்ஷாப் கடையில் தங்கள் யெஜ்டி, என்ஃபீல்டு வகையறாக்களை மெறுகேற்றிகொண்டு திரிவார்கள்.பெருத்த ஏக்கங்களுடன் கிட்டாரை தொட முயற்சி செய்து அண்ணன்களிடம் அடி வாங்கியதும் கிட்டாருக்கான கனவை மெய்ப்பிக்கமுடியவில்லை.
கல்லூரி சேர்ந்த புதிதில் இசைஞானியின் மேல் உள்ள காதலில் லட்சுமி சுந்தரம் ஹாலில் ”சத்குரு சங்கீத் சமாஜ்”ல் இலவசமாய் நானும் மைனர் குஞ்சு மற்றும் பெருமாளும் வயலின் கற்றுகொள்ள சென்ற இரண்டாம் வாரம் எங்களிடம் குருதட்சனை கேட்டு கேட்டு தோற்றுப்போன குரு பிரசன்னா சர்மா இறந்தே போனார்.. இரண்டாம் நாள் என்னருகே அமர்ந்த சுவாதி எனும் 6 வயது பாப்பாவின் என் வாசிப்பின் மீதுள்ள எரிச்சல் பார்வையை தாண்டி எங்களால் வயலினையும் தொடரமுடியவில்லை.
இசைஞானி அவற்றை அழகாக நிறைய கையாண்டிருந்தபடியால் கிட்டாரும், வயலினும் நம்மூர் இளைஞர்களுக்கு அத்தனை ஆதர்சமாய் ஆகியிருந்தது..
பின்னர் கீபோர்டு கற்றுகொண்டால் போதுமென கிட்டாருக்கும், வயலினுக்கும் விடை தந்தனர் நம்மாட்கள்.
இதோ! இசைஞானி! மறுபடியும் கிட்டாரை ரெங்க வைத்துள்ளார் நீ.எ.பொ.வ ஆல்பம் அதத்னை அழகு.
கிட்டார் பல்லவிக்கு முன்னால் நம்மை ஆட்கொள்கிறது என்றால், வயலின் சரணம் முடிந்ததும் சொக்க வைக்கிறது......
80-களின் சொக்கவைத்த இளையராஜாவின் இசையும், இன்றைய நவீன இசைஞானியின் கம்போசிஷனும் ஒரு ஜுகல்பந்தியாய் இனிக்கிறது பாடல்களில்.
இனி கிட்டார் இளைஞர்களை நிறைய பார்க்கலாம் தெருவில்.
”புடிக்கல மாமு!!!படிக்கிற காலேஞ்”
///புடிக்குது மாமே! நம்ம மேஸ்ட்ரோ மியூசிக்///
கல்லூரி சேர்ந்த புதிதில் இசைஞானியின் மேல் உள்ள காதலில் லட்சுமி சுந்தரம் ஹாலில் ”சத்குரு சங்கீத் சமாஜ்”ல் இலவசமாய் நானும் மைனர் குஞ்சு மற்றும் பெருமாளும் வயலின் கற்றுகொள்ள சென்ற இரண்டாம் வாரம் எங்களிடம் குருதட்சனை கேட்டு கேட்டு தோற்றுப்போன குரு பிரசன்னா சர்மா இறந்தே போனார்.. இரண்டாம் நாள் என்னருகே அமர்ந்த சுவாதி எனும் 6 வயது பாப்பாவின் என் வாசிப்பின் மீதுள்ள எரிச்சல் பார்வையை தாண்டி எங்களால் வயலினையும் தொடரமுடியவில்லை.
இசைஞானி அவற்றை அழகாக நிறைய கையாண்டிருந்தபடியால் கிட்டாரும், வயலினும் நம்மூர் இளைஞர்களுக்கு அத்தனை ஆதர்சமாய் ஆகியிருந்தது..
பின்னர் கீபோர்டு கற்றுகொண்டால் போதுமென கிட்டாருக்கும், வயலினுக்கும் விடை தந்தனர் நம்மாட்கள்.
இதோ! இசைஞானி! மறுபடியும் கிட்டாரை ரெங்க வைத்துள்ளார் நீ.எ.பொ.வ ஆல்பம் அதத்னை அழகு.
கிட்டார் பல்லவிக்கு முன்னால் நம்மை ஆட்கொள்கிறது என்றால், வயலின் சரணம் முடிந்ததும் சொக்க வைக்கிறது......
80-களின் சொக்கவைத்த இளையராஜாவின் இசையும், இன்றைய நவீன இசைஞானியின் கம்போசிஷனும் ஒரு ஜுகல்பந்தியாய் இனிக்கிறது பாடல்களில்.
இனி கிட்டார் இளைஞர்களை நிறைய பார்க்கலாம் தெருவில்.
”புடிக்கல மாமு!!!படிக்கிற காலேஞ்”
///புடிக்குது மாமே! நம்ம மேஸ்ட்ரோ மியூசிக்///
No comments:
Post a Comment