Tuesday, 25 December 2012

கும்கி



யாரும் அறியாத மலைப்பிரதேசம், இரண்டே இரண்டு போலீஸ் (இந்த படத்துல ரேஞ்சர்), தம்பி ராமையாவை நக்கலிடத்து கடுப்பேற்றுகிற ஒரு கதாபாத்திரம், சூழலுக்கு ஒத்துவராத ஆடல் பாடல்கள் - இதுதான் பிரபுசாலமனின் மைனா...... மன்னிக்கவும்.. இதுதான் கும்கி.. அட ரெண்டும் ஒண்ணுதான்.

வெளிநாட்டு zooவில் நம் ஹீரோ நடனமாடினால் ”ஆ”வென பிளந்து பார்க்கும் நம் பாமர ரசிகர்கள் கும்கியையும் வெகுவாக கொண்டாடுகிறார்கள்.

தம்பி ராமையா தான் யானைப்பாகனின் கிராமத்து தாய்மாமன் என்பதையும் மறந்து அடிக்கடி இங்கிலீஷ் பேசுகிறார்...EARTH QUAKE, FIRST NIGHT.........இன்ன பிற.

ஆதிவாசிகளின் மொழிவழக்கு என்று எதை சொல்ல வருகிறார் இயக்குநர் எனத் தெரியவில்லை. கலாச்சாரத்தை கட்டிக் காக்கும் கதாநாயகி ”லூசு” என ஒருவரை விளிக்கிறார். பாடல்களிலும் வட்டார மொழிவழக்குக்கான முக்கியத்துவம் தரப்படவில்லை..

ஆதிவாசிகள் நகர வாசிகளால் தொல்லைக்கு உண்டாகுகின்றனர் எனத் சொல்ல வருகிற கும்கி இயக்குநர் நகர யானையை கொண்டு காட்டுயானையை கொல்கிறார்.

விக்ரம் பிரபுவிற்கு யானையின் தந்தத்தில் ஏறி முத்தமிடுவதைத் தவிர ஹீரோயிசத்தை காண்பிக்க  வேறு ஏதும் இடமில்லை.

யானையை பற்றிய சுவாரசியமும் ஏதும் வைக்கவில்லை இயக்குநர்.

மொத்தத்தில் கொம்பனுக்கான ஹைப் + பில்ட் அப் எப்படி கடைசியில் மாணிக்கத்திடம் தோற்றதோ! அது போல கும்கி மாற்று சினிமா ரசிகனிடம் சரியாக தோற்கிறது.

No comments:

Post a Comment