Sunday, 9 June 2013

காதலை சொல்வது எப்படி? - ”வித் காதல் கிட் அட்டாச்டு”

ஒரு நீள A4 பேப்பரை எடுத்துகொள்ளவும்.... உங்கள் பயோடேட்டாவை தெளிவாக (வருமான விவரத்தோடு) டைப் செய்து கொள்ளவும்.
பத்திர பதிவு அலுவலகம் சென்று 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் வாங்கிக்கொள்ளவும்.இணைப்பாக 5 உதிரி தாள்அல் வாங்கிக் கொள்ளவும்.

1வது பக்கத்தில்..
பார்ட்டி 1ஆக- உங்கள் பெயர், தந்தை பெயர் , முகவரி, மாவட்டம், பின்கோடு டைப் செய்து கொள்ளவும்.
பார்ட்டி 2ஆக- உங்கள் காதலி/காதலன் பெயர், தந்தை, தாய் பெயர், முகவரி, பின்கோடு டைப் செய்து கொள்ளவும்.

2வது பக்கத்தில்.... உங்களின் வருங்கால மாமனார்/மாமியாருக்கு ஒரு ஒப்புகை கேட்பு கடிதம் எழுதவும். இதில் உங்கள் சாதி, அந்தஸ்து, வருமானம், நீங்கள் பார்க்கிற வேலை (வேலை இல்லையெனில் வேலைக்கான வாய்ப்பு), இதர குறிப்புகளை டைப் செய்து கொள்ளவும்.

3வது பக்கத்தின்...
மேற்பாகத்தில் உங்கள் காதலன்/காதலி சார்ந்த சாதி சங்கத்தின் தலைமைக்கு ஒரு ஒப்புகை கேட்பு மனுவும்,
கீழ்பாகத்தில் உங்களின் சாதி சங்க தலைமைக்கு ஒரு ஒப்புகை கேட்பு மனுவும் டைப் செய்து கொள்ளவும்.

4வது பக்கத்தில்... நீங்கள் விரும்புகிற பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம் எழுதவும். உங்கள் மனதுக்கு பிடித்தவாறு எழுதாமல், படிக்கிற அத்தனை பேருக்கும் பிடிக்கிறமாதிரி எழுதுவது சால சிறந்தது.
இத்துடன்...
• உங்கள் வருமான சான்று.
• உங்கள் சாதிச் சான்று.
• உங்கள் மத குருமார்களிடமிருந்து பெறப்பட்ட ஆசிர்வதிப்பு கடிதம்.
• உங்கள் மார்பளவு MAXI SIZE புகைப்படம் ஒன்று.
இணைக்கவும்.

ஏற்கனவே எழுதி வைத்த உங்கள் பயோடேட்டாவோடு இவையணைத்தையும் இணைத்துகொண்டு அனைவரிடமும் சென்று ஒப்புகை கையெழுத்து வாங்கிய பின்னர் நேராக உங்கள் காதலியை காந்தி பார்க்கிற்கோ, ஃகாபி டே-விற்கோ வரவழைத்து, முடிந்தால் முத்தங்களுடன் உங்கள் காதலை சொல்லவும்..

NOTE : முன்னரே நீங்கள் காதல் சொல்லப்போகும் காதலி இதுபோல் ”காதல் KIT”-ஐ வைத்திருக்கவில்லை என்று உறுதி செய்து கொள்வது அவசியம்..

”வெல்க காதல்... வாழ்க காதலர்கள்”

No comments:

Post a Comment