நான்,
நீ,
நாம்,
தமிழ்,
திமுக,
சென்னை,
செம்மொழி,
திருக்குறள்,
கண்ணகி,
பூம்புகார்,
தொல்காப்பியம்,
தொலைக்காட்சி,
அரசுப்பேருந்து,
நூலகம்,
தலைமைச் செயலகம்,
பகுத்தறிவு,
ராஜதந்திரம்,
உழைப்பு,
பத்திரிக்கையாளர்,
முதல்வர்,
அரசியல்வாதி,
அன்பகம்,
அறிவகம்
அறிவாலயம்.
இச்சொற்களை போட்டு
கலவை செய்க..
”கலைஞர்” என்றொரு
சொல் வரும்.
இன்னும் தமிழில் பல
சொற்கள் போட்டால்
அச்சொல்லை பற்றிய
வரலாறு வரும்.
அண்ணாவிடம்
இவர் கேட்டது,
இரவல் இதயம்.
நான்
இவரிடம் கேட்பேன்
இரவல் மூளை.
ஒரே ஒரு மூளை
அது
கதை எழுதும்,
கவிதை புணையும்,
கருத்து கூறும்,
அரசியல் பேசும்,
அன்பு செலுத்தும்,
பொருளாதரம் சொல்லும்,
பொறியியல் அறியும்,
சிற்பியாய் மாறும்,
ஓவியம் வரையும்,
ஒல்காப் புகழால்
நிலவினை எட்டும்.
சமுதாயம் மலர
சமத்துவம் பேசும்,
சாதியை அறுக்கும்.
இகழ்வோரை தாங்கும்-பதிலுக்கு,
நன்னயம் பகிரும்,
நன்றி மேல் நன்றி செய்யும்,
வரலாறாய் வாழும்.
பெரும் யானை அது!
நீயும், நானும்
அம்பெய்த கிடைத்த
யானை அது..
எய்திய அம்பு
தைக்காவிடினும்
எய்தவன் பேர் நிலைக்கும்
பெருமை அது...
ஊடகங்கள்
கற்றுகொண்ட பாடமிது.
இன்னும் இன்னும்
தைத்தாலும்,
எதையும் தாங்கும்
இதயமது – அது?
கலைஞரின் இதயம்.
14 வயதில்
மாணவ நேசன்
90 வயதிலும்
முரசொலிக்கும்
பத்திரிக்கைகாரன்.
மடமை அறுக்கும்
பகுத்தறிவுவாதி!
கடவுள் மறுக்கும்
நாத்திகக்காரர்!
சாதி கொழுத்தும்,
சமத்துவ செம்மல்.
யார்க்கும் எளிய
அரசியல்வாதி.
தொண்ணூறை நோக்கி.....
தொண்மைகளை தாங்கி,
புதுமைகளை ஏற்று,
நெஞ்சுக்கு நீதியாய்
வாழ்கிற முதுமை.
இன்னும்
பேசுகிறது,
இன்னும்
எழுதுகிறது,
இன்னும்
சிந்தனையை
ஓட்டுகிறது
ஊருக்காக..
வாழ்கிறது
வரலாறாய்.!!!!!!!!!
-----------------------------------------------------------------------
கலைஞரின் 90வது பிறந்தநாளுக்கு எழுதிய கவிதை
.
நீ,
நாம்,
தமிழ்,
திமுக,
சென்னை,
செம்மொழி,
திருக்குறள்,
கண்ணகி,
பூம்புகார்,
தொல்காப்பியம்,
தொலைக்காட்சி,
அரசுப்பேருந்து,
நூலகம்,
தலைமைச் செயலகம்,
பகுத்தறிவு,
ராஜதந்திரம்,
உழைப்பு,
பத்திரிக்கையாளர்,
முதல்வர்,
அரசியல்வாதி,
அன்பகம்,
அறிவகம்
அறிவாலயம்.
இச்சொற்களை போட்டு
கலவை செய்க..
”கலைஞர்” என்றொரு
சொல் வரும்.
இன்னும் தமிழில் பல
சொற்கள் போட்டால்
அச்சொல்லை பற்றிய
வரலாறு வரும்.
அண்ணாவிடம்
இவர் கேட்டது,
இரவல் இதயம்.
நான்
இவரிடம் கேட்பேன்
இரவல் மூளை.
ஒரே ஒரு மூளை
அது
கதை எழுதும்,
கவிதை புணையும்,
கருத்து கூறும்,
அரசியல் பேசும்,
அன்பு செலுத்தும்,
பொருளாதரம் சொல்லும்,
பொறியியல் அறியும்,
சிற்பியாய் மாறும்,
ஓவியம் வரையும்,
ஒல்காப் புகழால்
நிலவினை எட்டும்.
சமுதாயம் மலர
சமத்துவம் பேசும்,
சாதியை அறுக்கும்.
இகழ்வோரை தாங்கும்-பதிலுக்கு,
நன்னயம் பகிரும்,
நன்றி மேல் நன்றி செய்யும்,
வரலாறாய் வாழும்.
பெரும் யானை அது!
நீயும், நானும்
அம்பெய்த கிடைத்த
யானை அது..
எய்திய அம்பு
தைக்காவிடினும்
எய்தவன் பேர் நிலைக்கும்
பெருமை அது...
ஊடகங்கள்
கற்றுகொண்ட பாடமிது.
இன்னும் இன்னும்
தைத்தாலும்,
எதையும் தாங்கும்
இதயமது – அது?
கலைஞரின் இதயம்.
14 வயதில்
மாணவ நேசன்
90 வயதிலும்
முரசொலிக்கும்
பத்திரிக்கைகாரன்.
மடமை அறுக்கும்
பகுத்தறிவுவாதி!
கடவுள் மறுக்கும்
நாத்திகக்காரர்!
சாதி கொழுத்தும்,
சமத்துவ செம்மல்.
யார்க்கும் எளிய
அரசியல்வாதி.
தொண்ணூறை நோக்கி.....
தொண்மைகளை தாங்கி,
புதுமைகளை ஏற்று,
நெஞ்சுக்கு நீதியாய்
வாழ்கிற முதுமை.
இன்னும்
பேசுகிறது,
இன்னும்
எழுதுகிறது,
இன்னும்
சிந்தனையை
ஓட்டுகிறது
ஊருக்காக..
வாழ்கிறது
வரலாறாய்.!!!!!!!!!
-----------------------------------------------------------------------
கலைஞரின் 90வது பிறந்தநாளுக்கு எழுதிய கவிதை
.
No comments:
Post a Comment