Monday, 4 November 2013

மத விழாக்கள்

மதங்கள் யதார்த்த உலகின் மனிதனை முக்கியப்படுத்தாமல், கற்பனாவாதத்தின் கதாபாத்திரங்களை முன்னிலைபடுத்துவதால், இன்றைய முன்னேற்றம், மாற்றத்திற்கு எதிராக இருப்பதால் அனைத்து மதங்களும் மனிதனுக்கு எதிரியே.

ஆனாலும் மதங்கள் தத்தமது பிரச்சார வழமையாக கொண்ட கொண்டாட்டங்கள். திருவிழாக்கள் மூலமாக பகுத்தறிவு கொண்டோரையும் சில நேரம் தம் பக்கம் இழுத்துவிடுகிறது. 

மார்க்ஸ் சொன்னது போல மதம் அபின் போல. அது தன் வேலையை சரியாக செய்கிறது. இழுக்கிறது போதை. அழைக்கிறது கொண்டாட்டம்.

பகுத்தறிவு உள்ளோர் மனதளவில் இத்திருவிழாக்களை வெறுத்தாலும், ஊரோடு சேர்கிற கொண்டாட்ட மனநிலையில் தாமும் அம்மதத்தின் பிரச்சார கருவியாக மாறிவிடுகிறார். அதன் வெளிப்பாடுதான் அதற்கு வாழ்த்து சொல்வது.

நமக்கு எல்லா மதமும் சம்மதமில்லை என்று ஆனவுடன், மதத்தால் நன்மை இல்லை என்றானவுடன் ஆட்டுப் புழுக்கையில் முன் புழுக்கை என்ன, பின் புழுக்கை என்ன? கடவுளர் சாயம் பூசப்பட்ட அனைத்து மத விழாக்களும் அறிவுக்கு அப்பாற்பட்டவையே! அவ்விழாக்களுக்கு வாழ்த்துக்கள் பகிர்வதும் மடமையே!



No comments:

Post a Comment